இத்தாலியிலும் பரவியது கொரோன வைரஸ் - ஒருவர் பலி

" alt="" aria-hidden="true" />


 


இத்தாலி:

கொரோனா வைரஸ் சீனாவை தவிர மற்ற நாடுகளுக்கும் பரவி உள்ளது. ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், மக்காவ், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 28-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


இதில் ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா வைரசுக்கு ஒருவர் உயிரிழந்திருக்கிறார். 78 வயதான முதியவர் ஒருவர் வைரஸ் தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து இத்தாலி சுகாதார மந்திரி ராபார்ட்டோ கூறும்போது, “வெனேடோ பகுதியில் உள்ள வடக்கு மண்டலத்தை சேர்ந்த 78 வயதான முதியவர் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்” என்று கூறினார்.

கொரோனா வைரஸ் பீதி காரணமாக வடக்கு மண்டலத்தில் உள்ள 10 நகரங்களில் உள்ள பொது இடங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் விளையாட்டு நிகழ்ச்சி மற்றும் மத கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன


Popular posts
திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையினர் அனைவருக்கும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் அவர்கள் கை சுத்திகரிப்பானை ( Hand Sanitizer) வழங்கினார்
Image
புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதி வண்ணாங் குளத்தில் அமைந்துள்ள புதுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்கு
Image
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் NGGO நகரில்
Image
கொரோனா பாதிப்பு - இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒத்துழைப்பு மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
Image
பிரதமர் மோடியின் கரங்களில் இந்தியாவின் எதிர்காலம் பாதுகாப்பாக உள்ளது - ஜோதிராதித்ய சிந்தியா
Image